எம்ஆர்டி முதலீட்டைப் பயணக் கட்டணத்தின்வழி திரும்பப் பெற எண்ணவில்லை

nancyஅரசாங்கம்   எம்ஆர்டி   பயணக்  கட்டணங்கள்    மூலமாக    அதில்   செய்துள்ள   முதலீட்டைத்  திரும்பப்  பெற   உத்தேசிக்கவில்லை.

நாடாளுமன்றத்தில்   பிகேஆர்-  லெம்பா  பந்தாய்   உறுப்பினர்   நூருல்  இஸ்ஸா   அன்வாரின்      கேள்விக்குப்  பதிலளித்தபோது   பிரதமர்துறை   அமைச்சர்   நன்சி   சுக்ரி   இவ்வாறு   பதிலளித்தார்.

“அகண்ட   கோலாலும்பூரில்   பொதுப்   போக்குவரத்தை    மேம்படுத்தும்  நீண்டகாலத்    திட்டத்தின்   ஒரு   பகுதியாக    அரசாங்கம்  மேற்கொண்டுள்ள  ஒரு  முயற்சிதான்   எம்ஆர்டி   திட்டம்.

“அரசாங்கம்    என்ற  முறையில்   எம்ஆர்டி  திட்டத்துக்காக    செலவிட்ட  பணத்தைப்  பயணக்   கட்டணங்கள்  வழியாக    திரும்பப்  பெற   நாங்கள்   திட்டமிடவில்லை”,  என்றவர்  விளக்கினார்.