உண்மையைக் கண்டறிய இன்னொரு பொறிமுறை! அமைச்சரவை அனுமதிக்கு விரைவில் நடவடிக்கை

genevaஜெனீவா யோசனைகளின் அடிப்படையில் இறுதிக்கட்டப் போர் தொடர்பான உண்மைத் தகவல்களை கண்டறிய மிக விரைவில் பொறிமுறையொன்றை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இந்தக் கட்டமைப்பு எந்தவகையில் உருவாக்கப்படும், அதன் செயற்பாடுகள் என்ன என்பது குறித்து இதுவரை எந்தவித முன்கூட்டிய முடிவுகளும் எடுக்கப்படாத நிலையில், அரசாங்கம், இராணுவம் மற்றும் தமிழ்த்தரப்பு கலந்துரையாடி அது தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அமைச்சரவை அனுமதியை விரைவில் பெற்றுக் கொள்ள உள்ளதாக அமைச்சர் மங்கள சமரவீர அண்மையில் தெரிவித்திருந்தார்.

விடுதலைப் புலிகளுடனான போரின் இறுதிக்கட்டத்தில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணைப் பொறிமுறையொன்றை உருவாக்கி நியாயத்தை நிலைநாட்ட மேலும் இரண்டு வருட கால அவகாசம் கோரிய இலங்கையின் வேண்டுகோள் அண்மையில் ஜெனீவாவில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 47 உறுப்பு நாடுகளும் ஏகமனதாக இலங்கையின் கோரிக்கை தொடர்பில் ஆதரவளித்து வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

-http://www.tamilwin.com

TAGS: