மீண்டும் வெடிக்கும் மெரினா போராட்டம்..குவியும் இளைஞர்கள்!

இந்தியாவை உலுக்கிய மெரினா உட்பட தமிழகம் முழுவதும் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் போல் தற்போது மாணவர்கள் மீண்டும் மெரினாவில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

வறட்சி நிவாரணத் தொகையை அதிகரிக்க வேண்டும். பயிர்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தமிழக விவசாயிகள் தலைநகர் டெல்லியில் 15 நாட்களாக போராடி வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லியில் தொடர்ந்து போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து சென்னை மெரினாவில் குழு, குழுவாக இளைஞர்கள் கூடி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி ஹைட்ரோகார்பன் திட்டம், நெடுவாசல் திட்டத்தையும் எதிர்த்து இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை இளைஞர்கள் போராடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து, மெரினாவில் பொலிசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

-http://news.lankasri.com

TAGS: