பிரதமர்: 1எம்டிபி அத்தனை வங்கிக் கடன்களையும் கொடுத்து முடித்து விட்டது

parl2016   முடிய  ரிம50 பில்லியன்   கடன்  பட்டிருந்த   1எம்டிபி    அதன்   வங்கிக்  கடன்கள்,   குறுகிய-காலக்   கடன்கள்   அனைத்தையும்   கொடுத்து   முடித்து  விட்டதாக    பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்    கூறியுள்ளார்.

“இப்போது   1எம்டிபி-க்கு    வங்கிக்    கடனுமில்லை,  குறுகிய-காலக்  கடன்களும்  இல்லை”,  என  நிதி  அமைச்சர்    என்ற  முறையில்    நேற்று   நாடாளுமன்றத்தில்     நஜிப்   கூறினார்.

அவர்,   எர்   டெக்    ஹுவா(டிஏபி- பக்ரி)   கேட்டிருந்த   கேள்வி  ஒன்றுக்குப்  பதிலளிக்கையில்    அவ்வாறு   கூறினார்.

“1எம்டிபியைச்  சீர்படுத்தும்   திட்டம்    நடைபெற்றுக்  கொண்டிருப்பதால்   2015-இலும்  2016-இலும்     உள்நாட்டிலும்   வெளிநாட்டிலும்  அது   புதிதாக   சொத்துகள்  வாங்கவில்லை”,  என்றும்  பிரதமர்   கூறினார்.