ஊழல் விவகாரத்திலிருந்து கவனத்தைத் திசைதிருப்பவே சட்டம்355மீது இத்தனை கூத்தடிப்புகள்

amanahஅரசாங்கத்துக்கு   ஷியாரியா   சட்டத்தில்   திருத்தம்  செய்யும்   எண்ணம்    என்றும்  இருந்தது   இல்லை   என்பதால்   பாஸ்   தலைவர்   அப்துல்   ஹாடி  ஆவாங்    கொண்டுவந்த   தனிநபர்   சட்டவரைவைத்   தாக்கல்     செய்யும்  பொறுப்பை   அது   எடுத்துக்கொள்ளாது    என்று  முன்பே   தாம்   ஆருடம்   கூறியிருந்ததாக   அமனா   எம்பி   முஜாஹிட்   யூசுப்   ராவா  குறிப்பிட்டார்.

“எனக்கு  முன்பே   தெரியும்,  நிதி  மோசடிகளையும்    பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்   மற்றும்   பிஎன்னின்   அத்துமீறல்களை  மூடிமறைப்பதும்   அவற்றிலிருந்து   கவனத்தைத்   திருப்புவதும்தான்   இதன்   நோக்கமென்று.

“இதில்  ஷியாரியா    நீதிமன்ற  விவகாரம்   தூண்டில்  இரையாக  சிக்கிக்  கொண்டதுதான்   வருத்தத்துக்குரியது.  அதைவிட   வருத்தத்துக்கு   உரியது   பாஸ்  (தேசிய   விவகாரங்களில்)   அம்னோவைச்   சாடாமல்   மெளனம்   காத்தது.  சட்டம்  355-க்கு   அம்னோ   அளித்திருந்த   வாக்குறுதியை   நம்பி     அது   பேசாமல்   இருந்து  விட்டதுபோல்    தெரிகிறது”, என   அந்த  பாரிட்  புந்தார்  எம்பி   கூறினார்.