தமிழர்களுக்கான தனி நாடு நிச்சயம் கிடைக்கும் – சத்யராஜ்

sathyaraj1நடிகர் சத்யராஜ் ஒரு நடிகராக மட்டுமில்லாமல் சமுதாய நலனுக்கு தேவையான விஷயங்களுக்கு குரல்கொடுத்து வருபவர். அவ்வப்போது தமிழ் ஈழத்துக்கும் குரல் கொடுத்து வருகிறார்,

சமீபத்தில் ஈழத்து இயக்குனர் புகழ்ந்தி தங்கராஜ் இயக்கத்தில் கடல் குதிரைகள் திரைப்படம் மிக விரைவில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் சத்யராஜ் பேசுகையில் இப்படத்தை நான் ஏற்கனவே பார்த்துவிட்டேன், சமூகத்துக்கு தேவையான படம். இவ்விழாவுக்கு வந்ததில் மிகவும் சந்தோஷ படுகிறேன். புகழ்ந்தி தங்கராஜ், இசைமைப்பாளர் தேவேந்திரன் போன்றவர்கள் எனக்கு பல வருட பழக்கம்.

இந்த கடல் குதிரைகள் படம் சொல்ல வந்த விஷயத்தையும் ஈழத்து வலிகளையும் படத்தில் நடித்திருக்கிறோம் அனைவரும் உணர்ந்து நடித்துள்ளனர். மேலும் எல்லாருடைய கனவு என்பது தமிழ் ஈழம், அது என்றாவது ஒரு நாள் நடக்கும். ஒரு போராட்டம் என்பது 60 வருடத்தில் முடிகிற விஷயம் இல்லை. சில போராட்டம் 100 வருடங்கள் தாண்டி கூட நடக்கும். ஆனால் இலக்கு நேர்மையாக இருந்தால் வெற்றி கண்டிப்பாக கிடைக்கும் என்று கூறினார்.

-cineulagam.com