தம் கவிதையைத் தற்காத்துப் பேசும் அஸ்ரி, எதிப்பவர்களை ‘நன்றி மறந்தவர்கள்’ என்று சாடுகிறார்

muftiஇந்து   சமயத்தை    இழித்துரைப்பதாகக்   கூறப்படும்    தம்  கவிதையை   மீண்டும்   தற்காத்துள்ள   பெர்லிஸ்    முப்தி    முகம்மட்  அஸ்ரி   அபிடின்    தாம்  எப்போதும்     எல்லாச்  சமயங்களிடமும்    நியாயமாக     நடந்து  கொண்டிருப்பதாகக்   கூறினார்.

ஆனால்,  ஒரு   குறிப்பிட்ட    தரப்பு    அதையெல்லாம்  நினைத்து     நன்றி  பாராட்டவில்லை,   மாறாக   தம்  கவிதையைத்   திரித்துக்   கூறிவிட்டதாக     அவர்   சாடினார்.

“செய்ததையெல்லாம்   மதிக்கவில்லை.  மாறாக  இண்ட்ராப்   பள்ளித்  தொழுகை   உரைகளில்   தலையிடுகிறது.

“இந்தியாவின்     மோடி    அரசாங்கம்    குறித்து   நான்   எழுதிய   கவிதையையும்    மலேசிய   இந்துக்கள்   பற்றி   எழுதிய  கவிதை     என்று   திரித்துக்  கூறியிருக்கிறார்கள்.

“அவர்களுக்கு   என்னதான்   வேண்டும்?”,  என்று  அஸ்ரி   அவரது  முகநூல்  பக்கத்தில்   வினவுகிறார்.

“நீண்ட   காலமாகவே   எல்லா   சமயங்களுக்கும்   இணக்கமான    கருத்துகளைத்தான்    சொல்லி    வருகிறேன் –  எல்லாமே    நியாயமான   கருத்துகள்,  அமைதி   நோக்கம்   கொண்ட  கருத்துகள்.

“முஸ்லிம்- அல்லாதாரை   ‘காபிர்-ஹர்பி’   என்று   அழைப்பதற்கு   எதிர்ப்பு   தெரிவித்து   வந்துள்ளேன்,    அது   இனங்களுக்கிடையே    சச்சரவுகளை   உண்டுபண்ணலாம்   என்ற  கவலையில்”,  என்று   கூறிய   அவர்,   தம்   மாநிலம்   முஸ்லிம்- அல்லாதாருக்கு   நிதியுதவி   செய்து   வந்திருப்பதாகவும்     குழந்தைப்  பராமரிப்பு   விவகாரத்தில்    இந்துக்களுக்கு  ஆதரவான   போக்கைக்   கொண்டிருப்பதாகவும்    அவர்   சொன்னார்.

“பெர்லிஸ்  முப்தி   அலுவலகம்   எல்லாச்   சமயங்களிடமும்    இணக்கப்   போக்கைக்  கடைப்பிடித்து   வந்திருப்பதற்கு   இன்னும்   எவ்வளவோ    எடுத்துக்காட்டுகளைக்  கூற  முடியும்”,   என்றாரவர்.