நாளை பேரரசர் அரியணை அமரும் விழா

agongநாளை,  ஏப்ரல்   24  2017,   மலேசியர்கள்   புதிய   பேரரசர்   அரியணை    அமரும் விழாவைக்  கண்டுகளிக்கலாம்.

ஐந்தாம்   சுல்தான்   முகம்மட்    நாட்டின் 15-ஆவது பேரரசராக    நாளை     அதிகாரப்பூர்வமாக   அரியணை    அமர்வார்.  இந்த   வரலாற்றுச்   சிறப்புமிக்க   நிகழ்வு    இஸ்தானா   நெகராவின்   பாலாய்     ரோங்ஸ்ரீ-இல்   நடைபெறும்.  இதனை   முன்னிட்டு   இஸ்தானா  நெகரா   கோலாகலமாக   அலங்கரிக்கப்பட்டுள்ளது.

முழு   அரசச்   சடங்குகளுடன்    நடைபெறும்   இவ்விழாவில்   மாநில    ஆட்சியாளர்கள்,   பிரதமர்    தம்பதிகள், அ மைச்சர்கள்,  வெளிநாட்டுத்   தூதர்கள்,   நாட்டின்  பெருமக்கள்   முதலானோர்   கலந்து   கொள்வார்கள்.

பேரரசரின்    அரியணை   அமரும்   விழாவை      முன்னிட்டு   நாளை திங்கட்கிழமை பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.