பாரிசானைப்போல் பக்கத்தானில் ஆதிக்கம் செலுத்தும் பங்காளிக் கட்சி இல்லை- சைபுடின்

harapanபக்கத்தான்   ஹராபான்  கூட்டணியில்    முதன்மைக்  கட்சி,  ஆதிக்கம்   செலுத்தும்   கட்சி    என்று    எதுவும்  கிடையாது     என    அதன்    தலைமைச்   செயலாளர்   சைபுடின்   அப்துல்லா     கூறினார்.

இன்று   கோலாலும்பூர்   கூட்டரசுப்  பிரதேச   பக்கத்தான்  ஹராபான்  மாநாட்டில்    தொடக்க   உரை    ஆற்றிய    சைபுடின்,   விரைவில்     வருமென்று   எதிர்பார்க்கப்படும்    14வது   பொதுத்   தேர்தலில்    ஒரே  அணியாக    போட்டியிடுவதே   பங்காளிக்   கட்சிகளின்   வியூகத்   திட்டமாகும்    என்றார்.

“பக்கத்தான்  ஹராபானில்   ஆதிக்கம்    செலுத்தும்   பங்காளிக் கட்சி   இல்லை.  அதற்கு  இங்கு  இடமில்லை.  அது   பாரிசான்  நேசனல்    வழி.

“அதுவும்   கூட்டணிதான்,  இதுவும்  கூட்டணிதான்.   ஆனால்,   பக்கத்தான்   ஹராபானில்   யாரும்   மேலாதிக்கம்  செலுத்துவதில்லை”,  என  சைபுடின்  இன்று  செராஸில்  பிகேஆர்,  டிஏபி,   அமனா,  பெர்சத்து    ஆகிய    கட்சிகளைச்   சேர்ந்த   250   பேராளர்களிடையே  உரையாற்றியபோது   கூறினார்.

ஹராபான்  கட்சிகள்   14வது   பொதுத்   தேர்தலுக்கான   தேர்தல்    அறிக்கையைத்  தயாரித்து   வருவதாகவும்    அவர்    சோன்னார்.

ஹராபான்   புதிய   அணுகுமுறையைக்  கடைப்பிடிக்கும்    என்று   குறிப்பிட்ட  சைபுடின்   அது   பிஎன்னின்   இனத்தை   அடிப்படையாகக்   கொண்ட  அணுகுமுறைபோல்   இருக்காது   என்றார்.  இங்கே  கட்சிகள்   மக்களுக்கு   உதவுவதற்காக   தங்களுக்குள்   ஒன்றுக்கொன்று  உதவிக்  கொள்ளும் .