விவசாயிகளுக்காக பிரசன்னா, சிநேகா செய்த செயல்

sneka_prasanna

ஜல்லிக்கட்டு பிரச்சனை தொடர்ந்து தற்போது விவசாயிகளின் பிரச்சனை பெரிதாக பேசப்படுகிறது தமிழ்நாட்டில். டெல்லியில் கடந்த 40 நாட்களுக்கு மேலாக ஒவ்வொரு விதமாக விவசாயிகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் நஷ்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு ரூ. 2 லட்சம் கொடுக்க முன்வந்துள்ளனர் நடிகர் பிரசன்னா மற்றும் நடிகை சினேகா. பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு பின் 10 விவசாய குடும்பங்களுக்கு தொகையையும் வழங்கியுள்ளனர்.

இவர்களை போல பிரபலங்கள் பணம் கொடுக்க முடியவில்லை என்றாலும் ஆதரவு தெரிவிக்கலாமே என்று பலரும் கூறி வருகின்றனர்.

-cineulagam.com