தரமான மனித வளமே நாட்டின் வெற்றிக்குத் திறவுகோல்- பேரரசர்

agongஎதிர்காலத்தில்   தரமான  மனித  வளமே  மலேசியாவின்   வெற்றிக்குத்   திறவுகோலாக   விளங்கும்   எனப்  பேரரசர்   ஐந்தாவது   சுல்தான்  முகம்மட்   கூறினார்.

தரமான   மனித  வளத்தைக்  கொண்டுதான்    மக்கள்  தங்கள்    ஆக்கத்திறனையும்    போட்டியிடும்  ஆற்றலையும்   மேம்படுத்திக்கொள்ள    முடியும்.

இன்று  காலை   இஸ்தானா   நெகராவில்   நடைபெற்ற   15வது   பேரரசரின்    அரியணை   அமரும்   விழாவில்    உரையாற்றிய    மாமன்னர்,  “ஒவ்வொரு  மலேசியரும்  அவரவர்   பங்கினைப்  பொறுப்புடன்   ஆற்ற   வேண்டும்,  நாட்டுக்காக   உழைப்பதில்    கவனக்குறைவாக  இருந்துவிடக்  கூடாது”,  என்று  வலியுறுத்தினார்.

இளைய   தலைமுறையை   நாட்டின்   எதிர்காலம்    என்று   வருணித்த   ஐந்தாவது   சுல்தான்  முகம்மட் ,   அவர்கள்  அறிவாற்றலையும்   திறன்களையும்  கொண்டு   தங்களை   வளப்படுத்திக்  கொள்ள    வேண்டும்   என்றார்.

அறிவைத்  தேடுவதற்கு   முடிவே  இல்லை  என்றாரவர்.