மன்னிப்பு கேட்கவில்லை! பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் வீடு முற்றுகை?

தமிழரே தமிழரை ஆள வேண்டும் என்ற கருத்தை எதிர்ப்பதாகக் கூறிய நடிகர் பிரகாஷ்ராஜ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழர் முன்னேற்றப்படையின் தலைவர் வீரலட்சுமி கூறியுள்ளார்.

தமிழர் முன்னேற்றப்படையின் தலைவர் வீரலட்சுமி தனது பேஸ்புக் பக்கத்தில், தமிழரே தமிழரை ஆள வேண்டும் என்ற கருத்தை எதிர்ப்பதாக கன்னட நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

இக்கருத்துக்கு தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் வரும் 28-ஆம் திகதி நடிகர் பிரகாஷ் ராஜின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

9 ஆண்டுகளுக்கு முன்பு காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில் தமிழர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் நடிகர் சத்யராஜ் தனது கருத்தை வெளியிட்டிருந்தார்.

இதனை சுட்டிக்காட்டி கன்னட அமைப்புகள் சத்யராஜ் மன்னிப்பு கேட்டால் மட்டுமே பாகுபலி 2 திரைப்படம் வெளியிடப்படும் என்று தெரிவித்தன.

இதனால் சத்யராஜ் சமீபத்தில் தான் அன்று கூறிய கருத்திற்கு வருத்தம் தெரிவிப்பதாக கூறினார்.

இந்நிலையில் கன்னட நடிகர் பிரகாஷ்ராஜின் தமிழர் விரோத கருத்தை கண்டித்து தமிழர் முன்னேற்றப்படை போர்க் கொடி தூக்கியுள்ளது.

 

-lankasri.com