மஞ்சலை ஊசி மூலம் எடுக்கும் வெள்ளை இனத்தவர்கள்: அதிகம் எடுத்தால் ஆபத்து என்கிறார்கள்

சமீப காலமாக மஞ்சல் உடலுக்கு நல்லது. ஆரோக்கியமானது, கிருமி நாசினி மற்றும் கேன்சர் வருவதை இது தடுக்கும் என்று பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகிறது. இது மருத்துவ ரீதியாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னரே மஞ்சலை தமிழர்கள் கண்டு பிடித்து அதனை உணவுகளில் சேர்த்து உண்டுவந்தார்கள் என்பது ஒரு புறம் இருக்க. வெள்ளை இனத்தவர்கள் மஞ்சலை தமது உணவில் போட முடியாது.

காரணம் அவர்கள் உணவு வகைகளில் மஞ்சல் சேர்பது கடினமான விடையம். இதனால் தற்போது மஞ்சலை சுத்தம் செய்து சில வகையான திரவங்களோடு அதனை கலந்து ஊசி மருந்தாக விற்க்க ஆரம்பித்துள்ளார்கள். இந்த ஊசி மருந்தை வங்கி வெள்ளையர்கள், போட்டு வருகிறார்கள். இது எல்லை மீறிச் செல்வதாகவும். மாதம் பல தடவைகள் இவ்வாறு ஊசி மருந்தை எடுத்துக் கொள்ளும் பழக்கம் பலரிடம் காணப்படுவதாகவும் சமீபத்தில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உணவில் ஒரு அளவுக்கு மஞ்சலை சேர்த்து உண்டால், அது உடலுக்கு மிகுந்த பலன் தரும் என்றும். இவ்வாறு அளவுக்கு அதிகமாக அதனை ஊசி மூலம் ஏற்றுவது கெடுதல் தரும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

-athirvu.com