நக்சலைட்டுகள் தாக்குதல்: 26 மத்திய ரிசர்வ் பொலிஸ் படை வீரர்கள் பலி

இந்தியாவின் சத்தீஷ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் மத்திய ரிசர்வ் பொலிஸ் படை வீரர்கள் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

சுக்மா மாவட்டத்தில் உள்ள புர்காபல் – சிந்தகுவாவுக்கு இடையே சாலையை திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் 74-வது படைப்பிரிவைச் சேர்ந்த சிஆர்பிஎப் வீரர்கள் சுமார் 90 பேர் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வீரர்களை சுற்றி வளைத்த 300-க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் திடீரென துப்பாக்கியால் சுட்டு தாக்குதலை நடத்தினர்.

இதில் வீரர்கள் 24 பேர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தனர். இதனை அடுத்து பாதுகாப்பு படை பதிலடி தாக்குதலை நடத்த நக்சலைட்டுகள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்து பாதுகாப்பு படை அதிகாரிகளும் வீரர்களும் ஹெலிகாப்டர் உதவியோடு காயமடைந்தோரை மீட்டு ராய்பூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தற்போது வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

-lankasri.com

TAGS: