இசி கடிதம் வெளியிட்டது உண்மையா?

amanahஅரசியல்   கட்சிகளுக்குக்  கூடுதல்  வாக்காளர்   பட்டியலின்   பிரதிகள்  வழங்குவதை    நிறுத்திக்கொள்ளுமாறு  உத்தரவிட்டு  தேர்தல்    ஆணைய(இசி)  செயலாளர்   அப்துல்   கனி   சாலே    எழுதிய  கடிதம்  என்று   கூறப்படும்   ஒன்று   சமூக  வலைத்தளங்களில்   வலம்   வந்து   கொண்டிருக்கிறது.

அது  உண்மையான  கடிதம்தானா   என்று   அமனா   இளைஞர்   தலைவர்   முகம்மட்   சனி   ஹம்சா  இசியை   வினவினார்.

“அது  உண்மையானதுதான்   என்றால்  நாங்கள்   மிகவும்  ஏமாற்றமடைகிறோம். அதை   மீட்டுக்கொள்ள   வேண்டும்”.   சனி  புத்ரா  ஜெயாவில்   அமனா  இளைஞர்களின்   மகஜர்  ஒன்றை  இசி    தலைமையகத்தில்   கொடுத்த   பின்னர்   செய்தியாளர்களிடம்    பேசினார்.

இசி ,    நூல்  வடிவிலோ   குறுவட்டு   வடிவிலோ   கூடுதல்  வாக்காளர்   பட்டியலின்   பிரதிகளை  இனிமேலும்  அரசியல்  கட்சிகளுக்கு  வழங்கப்போவதில்லை    என்று    அக்கடிதத்தில்  குறிப்பிடப்பட்டிருக்கிறதாம்.