சாபாவுக்குள் நுழைய டோனி புவாவுக்குத் தடை

puaடிஏபி   நாடாளுமன்ற   உறுப்பினர்   டோனி   புவா  சாபாவில்  அடியெடுத்து  வைப்பதினின்றும்   தடுக்கப்பட்டார்.

1எம்டிபி  மீதான   மூன்று-நாள்   கருத்தரங்கில்   கலந்துகொள்வதற்காக   இன்று    பிற்பகல்     12.50க்கு   கோத்தா  கினாபாலு   அனைத்துலக  விமானம்    வந்து   சேர்ந்த   அவரைக்  குடிநுழைவுத்துறை   அதிகாரி  ஒருவர்   தடுத்து   நிறுத்தினார்.

“மாநில     அரசிடமிருந்து    காலையில்   உத்தரவு  வந்ததாக     அவர்   சொன்னார்.  காரணம்   எதுவும்   சொல்லவில்லை”,  என  புவா   மலேசியாகினியிடம்    தெரிவித்தார்.

“இப்போது   கோத்தா  கினாபாலு   குடிநுழைவு   அலுவலகத்தில்    இருக்கிறேன்.  பிற்பகல்   மணி   2 -க்குத்   திருப்பி  அனுப்பப்படுவேன்   என்றாரவர்.