சீனா எல்லையில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான சுகாய் போர் விமானம் மாயமானது

sukhoi380சீனா எல்லையில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான சுகாய் போர் விமானம் மாயமானது.

கவுகாத்தி,

அசாம் மாநிலம் திஸ்பூரில் இருந்து வழக்கமான பயிற்சி  பணிக்காக புறப்பட்டு சென்ற விமானம் மாயமானது என விமானப்படை தகவல்கள் தெரிவித்து உள்ளன. 2 விமானிகளுடன் திஸ்பூரில் இருந்து புறப்பட்ட விமானம் 60 கிலோ மீட்டர் தொலைவில் சென்றபோது ரேடார் சிக்னலில் இருந்து மறைந்தது. சீன எல்லைப் பகுதியில் விமானம் மாயமானது எனவும், விமானத்தை தேடும் பணியானது தொடங்கி உள்ளது எனவும் முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. விமானத்தை இந்திய விமானப்படை தேட தொடங்கி உள்ளது.

-dailythanthi.com

TAGS: