தொப்புளில் எண்ணெய் விட்டால் இவ்வளவு நன்மைகளா?

navelசமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய்யை தொப்புளில் விட்டால் சில ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன.

அது பற்றி பார்ப்போம்,

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்யை தொப்புளில்விட்டால்,

 

  • இனப்பெருக்கம் தொடர்பான உறுப்புகளின் ஆரோக்கியம் மேம்படும்
  • வறண்ட சருமம் சரியாகும்.
  • வறட்சியான கேசம் சாதாரண நிலைக்கு மாறும்.
  • சருமம் அழகாக இருக்கும்.

 

சுத்தமான நெய் அல்லது வெண்ணெய்

பசும்பாலால் தயாரித்த சுத்தமான நெய் அல்லது வெண்ணெய்யை தொப்புளில் விட்டு, அரை இன்ச் அளவுக்கு சுற்றித் தடவி மசாஜ் செய்து வந்தால்,

 

  • சருமம் மென்மையாக மாறும்.
  • பார்வைத்திறனும் மேம்படும்.
  • சருமம் பளபளப்பாக காட்சியளிக்கும்.
  • வெடித்த உதடு அழகாக மாறும்.

ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெய்யை தொப்புளில் விட்டு சிறிது நேரம் மெதுவாக மென்மையாக சுற்றி மசாஜ் செய்தால்,

 

  • இனப்பெருக்கம் தொடர்பான உறுப்புகள் சீராக இயங்கும்.
  • சோர்வு நீங்கும்.
  • பொலிவான சருமமாக மாறும்.
  • குழந்தைக்கு திட்டமிடுபவர்கள், இதை செய்தால் பலன் கிடைக்கும்.

வேப்பெண்ணெய்

வேப்பெண்ணெய்யை தொப்புள் பகுதியில் சிறிதளவு விட்டால், முகத்தில் உள்ள சிறு சிறு வெள்ளை திட்டுக்கள் மறையும்.

தூங்கும் முன்னர் வேப்பெண்ணெய்யை 2-3 துளிகள் தொப்புளில் விட்டால், முகத்தில் வரும் பருக்கள் சில நாட்களிலேயே மறைந்துவிடும்.

சரும எரிச்சலுக்கு நல்ல தீர்வு.

கடுகு எண்ணெய்

தூங்கும் முன் கடுகு எண்ணெய்யை 3-4 துளிகள் அளவுக்கு தொப்புளில்விட்டால், வறண்ட மற்றும் பிளவுபட்ட உதடு சரியாகும்.

தொடர்ந்து இப்படிச் செய்தால், உதடு இளச்சிவப்பாகக் காணப்படும். ஆரோக்கியமாகவும் இருக்கும்.

வறண்ட மற்றும் சிவப்பான கண்கள்கூடச் சரியாகும்.

உதட்டில் தோல் உரியும் பிரச்சனையும் நிற்கும்.

-lankasri.com