ஜாக்கர்தா பஸ் நிலையத்தில் குண்டு வெடிப்பு

 

Explosionஇந்தோனேசியா, கிழக்கு ஜாக்கர்தா, கம்போங் மெலாயு பஸ் நிலையத்தில் நடந்த இரு குண்டு வெடிப்பால் அந்நிலையம் அதிர்ந்தது.

அச்சம்பவம் மலேசிய நேரம் இரவு மணி 10.00 அளவில் நடந்ததாக ஜாக்கர்தா போஸ்ட் கூறுகிறது.

இச்சம்பவத்தில் பஸ் பிரயாணிகள் மற்றும் பஸ் நிலைய ஊழியர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை என்று கூறிய கிழக்கு ஜாக்கர்தா மூத்த போலீஸ் அதிகாரி அண்டி விபோவோ, போலீசார் இன்னும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.

உயிர் இழப்புகள் நேர்ந்தனவா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், ஒருவரின் உடற்பாகங்கள் சிதறிக்கிடந்தது காணப்பட்டதாக டெம்போ கூறுகிறது.