மகாதிர்: அன்வாரும் ஹராபானின் பிரதமர் வேட்பாளர்களில் ஒருவர்தான்

anwar dr mபக்கத்தான்  ஹராபானின்   பிரதமர்   வேட்பாளர்களில்    பிகேஆர்     நடப்பில்   தலைவர்    அன்வார்   இப்ராகிமும்   ஒருவர்தான்    என்பதை   முன்னாள்   பிரதமர்   மகாதிர்   முகம்மட்    ஒப்புக்கொண்டிருக்கிறார்.

இன்வோக்   அமைப்பு    மேற்கொண்ட    ஆய்வு   ஒன்றில்    மகாதிர்    அவ்வாறு   கூறினார்.  அவ்வாய்வு   எதிரணி    ஆதரவாளர்களில்     பெரும்பாலோர்    அன்வார்   பிரதமர்    ஆவதையே   விரும்புகிறார்கள்    என்பதைக்   காண்பித்தது.

பிரதமர்   ஆவதெல்லாம்   பிறகுதான்,  முதலில்   14வது   பொதுத்    தேர்தலில்   வெல்ல   வேண்டும்   என்பதை   மகாதிர்    வலியுறுத்தினார்.

“வெற்றி  பெறாவிட்டால்   (எதிரணியிலிருந்து)   யாரும்   பிரதமராக   முடியாது.  அதனால்,  வெற்றி  பெறுவது   முக்கியம்.

“யார்   வேண்டுமானாலும்   (பிரதமர்)   வேட்பாளராக    இருக்கலாம்”,  என்றாரவர்.   நேற்றிரவு  பார்டி  பிரிபூமி  பெர்சத்து    மலேசியா  ((பெர்சத்து)   செராமா   ஒன்றில்   கலந்துகொண்ட   பின்னர்  மகாதிர்     செய்தியாளர்களிடம்   பேசினார்.