1எம்டிபிமீது கவனம் செலுத்தி மற்ற முறைகேடுகளைக் கவனிப்பதில்லையே: பொருளாதார நிபுணர் ஆதங்கம்

feldaகடந்த    சில    ஆண்டுகளாக    உள்நாட்டிலும்   வெளிநாட்டிலும்     மலேசியா  பற்றிய   பேச்சுகளில்    1எம்டிபி    முறைகேடுதான்   முக்கிய   இடம்பெற்றிருக்கிறது.

இப்படி   1எம்டிபி  மீதே  கவனம்   செலுத்தி   மற்ற   முறைகேடுகளைக்  கவனிக்கத்    தவறி   விடுகிறோம்   என்று   எச்சரிக்கிறார்   பொருளாதார    வல்லுனர்    ஜோமோ  குவாமே  சுந்தரம்.

முன்னாள்     ஐநா  பொருளாதார  மேம்பாட்டுக்கான   உதவித்   தலைமைச்   செயலாளரான    அவர்,   ஓர்    எடுத்துக்காட்டாக,   பெல்டா   குளோபல்   வெண்ட்சர்ஸ்  ஹொல்டிங்ஸ்  பெர்ஹா (எப்ஜிவி)   பங்கு   விலை  குறைந்து   வருவதைக்  குறிப்பிட்டார்.

“பெல்டா   குடியேற்றவாசிகள்    எப்ஜிவி-இல்  பங்குகள்   வாங்க   ஊக்குவிக்கப்பட்டார்கள். இப்போது   பங்குகளின்   மதிப்பு  அவர்கள்   எவ்வளவு   கொடுத்து   வாங்கினார்களோ   அதில்  மூன்றில்   ஒரு  பகுதியாக  அல்லது  அதற்குச்  சற்றுக்  கூடுதலாக   இருக்கும்   அவ்வளவுதான்.

“தேர்தல்   நெருங்கி    வருவதால்   அவர்கள்   போட்ட   பணத்தை   இழக்க  மாட்டார்கள்,   அது   இது  வென்று   என்னவெல்லாமோ   சொல்கிறார்கள்.  ஆனால்,  முறைகேடு   நிகழ்துள்ளதற்கு   அது   ஓர்    எடுத்துக்காட்டு.   அது   ஊழலா   இல்லையா   என்பதைப்  பற்றியெல்லாம்    பிறகு   விரிவாக   பேசலாம்”,  என   பேராசிரியர்  ஜோமோ   பெட்டாலிங்   ஜெயாவில்   ஒரு   கருத்தரங்கில்   கூறினார்.