வருமானத்தை அறிவிக்கத் தவறியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் கேஎல்- சிஐடி தலைவர் விடுவிப்பு

cidகோலாலும்பூர்     செஷன்ஸ்    நீதிமன்றம் ,  கோலாலும்பூர்   குற்றப்புலனாய்வுத்   துறை     முன்னாள்    தலைவர்    கூ   இன்  வா-வை  அவர்  தம்   வருமானத்துக்கான  மூலங்களை    அறிவிக்கவில்லை    என்ற  குற்றஞ்சாட்டிலிருந்து   விடுதலை   செய்தது.

“அரசுத் தரப்பு   குற்றச்சாட்டை   ஐயத்துக்கிடமின்றி   நிரூபிக்கத்    தவறிவிட்டது.  அதனால்   குற்றஞ்சாட்டப்பட்டவர்   விடுவிக்கப்பட்டு    அவரது   பிணைப்பணமும்   திரும்பக்  கொடுக்கப்பட    வேண்டும்”,  என்று   செஷன்ஸ்     நீதிபதி   சொஹாய்னி   அலியாஸ்   தீர்ப்பளித்தார்.

அந்த  முன்னாள்   போலீஸ்   அதிகாரி   அரசுத்  தரப்பு    வழக்குரைஞர்   2013,   டிசம்பர்   23-இல்   அனுப்பிய   அறிவிக்கைக்கு  இணங்க   அவரது   வருமானத்துக்கான  மூலங்ளை   அறிவிக்கத்    தவறிவிட்டார்   எனக்  குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.