பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களில் 61 விழுக்காட்டினர் சிறார்கள், அமைச்சர் கூறுகிறார்

 

childrenaffectedrohainiகடந்த மூன்று ஆண்டுகளில் நடந்ததாக கூறப்பட்டுள்ள 12,926 பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களில் 61 விழுக்காட்டினர் சிறார்கள் என்று மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் ரொஹாணி அப்துல் கரிம் கூறுகிறார்.

இச்சூழ்நிலை மிகக் கடுமையானது ஏனென்றால் இதனால் பாதிக்கப்பட்ட சிறார்கள் எதிர்மாறான இயல்புள்ள அகத்தாக்கத்துடன் வளர்வார்கள் என்றார்.

அவரது அமைச்சு குடும்ப வன்முறை மற்றும் குழந்தைகள் முறைகேடாக நடத்தப்படுதல் ஆகியவற்றை கையாள்வதற்கு போலீசாருடன் மிக நெருக்கமாக செயல்படும் என்பதோடு பாதிக்கப்பட்டோருக்கு மறுவாழ்வு அளித்து அவர்கள் வழக்கமான வாழ்க்கையைத் தொடர ஆவன செய்யப்படும் என்றாரவர்.