எம்சிஎ: கெலாங் பாத்தா வேட்பாளர் யார்?, அவசரம் ஒன்றுமில்லை

 

Gelangnohurrymca14 ஆவது பொதுத் தேர்தலில் கெலாங் பாத்தா நாடளுமன்ற தொகுதியில் போட்டியிடவிருக்கும் வேட்பாளரை தேர்வு செய்வதில் மசீச அவசரப்பட போவதில்லை..

வேட்பாளர் ஒருவரை முன்னதாகவே அறிவிப்பதைவிட இது ஒரு சிறந்த முறையாகும் என்று மசீசவின் துணைத் தலைவர் வீ கா சியோங் கூறினார்.

“வேட்பாளர் பற்றி நாங்கள் இறுதியாக ஒரு முடிவு எடுப்போம். பல தொகுதிகளில் தேர்வு செய்வதற்கு ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள்.

“ஆகவே, நேரம் வரும்போது நாங்கள் இறுதி முடிவு செய்வோம். அவசரம் ஒன்றுமில்லை”, என்று அவர் செய்தியாளர்களிடம் இன்று கூறினார்.

ஜோகூர் மசீசவின் தேர்தல் இயந்திரத்தின் தயார்நிலை பற்றியும், எதிர்வரும் பொதுத்தேர்தலில் புதிய முகங்கள் அறிமுகப்படுத்துவது பற்றியும் வீ கருத்துரைத்தார்.