சிவராசாவுக்கு எதிராக பெர்காசா ஆர்ப்பாட்டம்

 

perkasaaftersivarasaகோத்தா டாமன்சாராவிலுள்ள சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சிவராசாவின் அலுவலகத்திற்குமுன் பெர்காசா இளைஞர்கள் கூடி, குதித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அனுமதிக்கப்படாத எவரும் மசூதியிலோ அதன் வளாகத்திலோ பேசக் கூடாது என்று சிலாங்கூர் சுல்தான் பிறப்பித்திருந்த உத்தரவுக்கு பணியாததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று பெர்காசா இளைஞர் தலைவர் அஸ்ருல் அக்மால் ஷகாருடின் ஓர் அறிக்கையில் கூறினார்.

சிலாங்கூர் சுல்தான் கடந்த வெள்ளிக்கிழமை சிவராசா வரம்பு மீறி விட்டார் என்று கண்டனம் தெரிவித்திருந்தார்.

ஆனால், சிவராசா அக்குற்றச்சாட்டை மறுத்ததோடு இந்த சம்பவத்தை விளக்கி சிலாங்கூர் சுல்தானுக்கு கடிதம் எழுதப் போவதாக கூறியிருந்தார்.

சிவராசா சிலாங்கூர் சுல்தானிடம் மன்னிப்பு கேட்கத் தவறியதற்காக அவரை அஸ்ருல் சாடினார்.

சிவராசா சுல்தானின் சினத்தை மட்டும் தூண்டிவிடவில்லை, முஸ்லிம்களின் சினத்தையும்கூட என்று அஸ்ருல் கூறிக்கொண்டார்.