இன்று நீ வருவாயா

sidebar-title-poemsவளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது. இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி கருத்தூட்டப் (comment) பகுதியில் பதிவு செய்யவும்.

 

உன்னைக் கண்ட போதே 

monica-muslimஎன் இதயம் சுக்கு நூறாகி விட்டது 

உன் விழிப்பாய்ச்சல் தாங்க முடியாமல் 
கல் பட்ட கண்ணாடியாய் நான் சிதறிப் போனேன் 

நீ அருகில் இருந்தால் ஆனந்தப் படுகிறேன் 
மழை கண்ட பயிராக உடல் செழிக்கிறேன் 
நீ இல்லாத போது ஆற்றாமை கொள்கிறேன் 
நீரில்லாத நிலமாய் கருகிக் காய்கிறேன் 

எத்தனை ஏக்கத்தை என்னுள்ளம் தாங்கும் 
எத்தனை ஏகாந்தத்தை அது உள் வாங்கும் 
காற்றடைத்த பலூன் போன்று அது வீங்கிக் கிடக்கிறது 

நீயின்றி வெந்து வாடும் என்னுடல் மீது 
கருணை மழை பெய்யக் கூடாதா 
இனியும் என்னுடல் தாங்காது இன்றே நீ வருவாயா 

-ஆக்கம் 
அஷ்ரப் அலி

TAGS: