வடக்கில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி! சமரசத்தில் இறங்கியுள்ள சர்வதேசம்

viksamவடக்கு அரசியல் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு தீர்வு காணும் நடவடிக்கையில் வெளிநாட்டு தூதுவர்கள் ஈடுபட்டு வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

வட மாகாண சபையில் எழுந்துள்ள பிரச்சினையை தீர்க்க முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் தமிழத் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சி தலைவர்களுக்கு இடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.

தற்போது வரையில் சாதகமான நிலை கிடைக்காத நிலையில், பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலையில் கொழும்பிலுள்ள சில தூதரகங்கள் மற்றும் உயர் ஆணைக்குழுக்கள் இந்த விடயத்தில் தலையிட்டுள்ளன. பிரச்சினைக்கு இணக்கத்துடன் தீர்வு காணுமாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வடமாகாண சபை அமைச்சர்கள் இருவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் வடக்கு முதலமைச்சர் நடவடிக்கை எடுத்திருந்தார்.

இதனையடுத்து வடக்கு முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம், சபையின் உறுப்பினர்களால் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதனையடுத்து வடக்கு அரசியல் மட்டத்தில் கடந்த சில தினங்களாக நிச்சயமற்ற நிலை காணப்படுகிறது.

இவ்வாறான சூழ்நிலையை கட்டுப்பாட்டுக்கள் கொண்டு வர அமைச்சர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டாம் என, தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா சம்பந்தன், வட மாகாண சபை முதலமைச்சருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

எனினும் குறித்த இரண்டு அமைச்சர்களிடமிருந்தும் எழுத்துமூல உறுதிமொழியை எதிர்பார்ப்பதாக வடக்கு முதமைச்சர் பதில் கடிதம் எழுதியிருந்தார்.

இதனை ஏற்றுக்கொள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் மறுத்துள்ள நிலையில், வடக்கு அரசியல் நெருக்கடி இன்னும் முற்றுப்பெறதா நிலை நீடித்து வருவதாக குறித்து ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

-tamilwin.com

TAGS: