நல்லிணக்கத்தைக் கெடுத்ததற்காக சிவராசாவுக்கு அடி கொடுத்தேன் என்கிறார் கு நான்

 

kunanwhackedபிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சிவராசா தொடர்ந்துள்ள வழக்கு ஆணையைப் பெற்றுக் கொண்ட பின்னர், நல்லிணக்கத்தைக் கெடுத்ததற்காக சுபாங் நாடாளுமன்ற உறுப்பினரை தாம் சாடியதாக கூட்டரசு பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் கூறினார்.

கடந்த மாதம், மஸ்ஜிட் அன்-நூர் கம்போங் மெலாயு, சுபாங்கில் சிவராசா அரசியல் பேசியதாக தெங்கு அட்னான் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து அவர் மீது சிவராசா அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

“நான் எனது வழக்குரைஞர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளேன். நான் அவரை நீதிமன்றத்தில் சந்திப்பேன்”, என்று கு நான் அவரது வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.