விக்னேஸ்வரன் தேவான் நெகாரா தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டார்

 

vigreappointedமஇகா உதவித் தலைவர் எஸ்.எ. விக்னேஸ்வரன் நாடாளுமன்ற மேளவையின் தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டார்.

முதலில், அவர் செனட்டின் உறுப்பினராக இரண்டாவது தவணைக்கு பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

வினேஸ்வரன் தலைவர் பதவிக்கான சத்திய பிரமாணத்தை தேவான் நெகாராவின் துணைத் தலைவர் அப்துல் ஹலிம் அப்துல் சாமாட் முன் எடுத்துக் கொண்டார்.

இன்று, தேவான் நெகாராவின் சிறப்பு அமர்வில் பிரதமர்துறை அமைச்சர் அஸலீனா ஓத்மான் சைட் செனட் தலைவர் பதவிக்கு விக்னேஸ்வரனின் பெயரை முன்மொழிந்தார். சுகாதார அமைச்சர் டாக்டர் எஸ். சுப்ரமணியம் வழிமொழிந்தார்.

வேறு எந்தப் பெயரும் முன்மொழியப்படவில்லை. தேவான் நெகாரவின் உறுப்பினர்கள் விக்னேஸ்வரனின் நியமனத்தை ஏகமனதாக ஏற்றுக்கொண்டனர்.