பாகுபலி படத்தால் இந்தியாவுக்கு கிடைத்த பெருமை! என்ன தெரியுமா

baahubali451ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி 2 படம் சமீபத்தில் வெளியாகி பெரும் சாதனை படைத்தது. பிரபாஸ், ராணா, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் என பலரும் தங்களது திறமைகளை இப்படத்தில் காட்டினர்.

ரூ 1500 கோடிக்கும் மேலாக வசூல் செய்த படம் விரைவில் சீனாவிலும் வெளியாகவுள்ளது. இதனால் இன்னும் வசூலை அள்ளி பெரும் புரட்சியை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் சர்வதேச திரைப்பட விழா ஜூன் 22 ல் தொடங்கி இம்மாதம் 29 வரை நடைபெறவுள்ளது. இதில் நிகழ்ச்சியில் ஆரம்பத்திலேயே பாகுபலி 2 படத்தை சிறப்பு திரையிடலாக அதிலும் முதல் படமாக காண்பித்துள்ளார்கள்.

இப்படியான ஒரு பெரு விழாவில் முதல் படமாக பாகுபலி 2 போடப்பட்டது இந்தியாவுக்கு கிடைத்த பெருமை. இதனால் மகிழ்ச்சியளிப்பதாக விழாவில் கலந்துகொண்ட ராஜமௌலி ட்விட்டரில் கூறியிருக்கிறார்.

-cineulagam.com