பெல்டா குடியேற்றக்காரர்களுக்கு ஒரு நற்செய்தி

feldaவரும்  ஞாயிற்றுக்கிழமை     பெல்டா   குடியேற்றக்காரர்களுக்கு  நற்செய்தி  காத்திருக்கிறது.    பெல்டா   குடியேற்றக்காரர்கள்  தினமான    அன்று   பிரதமர்   நஜிப்   அப்துல்  ரசாக்   அதனை    அறிவிப்பார்.

இதனைத்   தெரிவித்த  பிரதமர்துறை   துணை  அமைச்சர்    ரசாலி   இப்ராகிம்,  நாட்டின்     மேம்பாட்டில்   பெல்டா   குடியேற்றக்காரர்களின்   பங்களிப்பைப்  பாராட்டி   அவர்களின்   நிதிச்சுமையைக்   குறைக்க    அரசாங்கம்   தொடர்ந்து   அவர்களுக்கு    உதவி   வரும்  என்றார்.

குடியேற்றக்காரர்களுக்கு    உதவும்   அரசாங்கத்தின்   முயற்சிகளை    எவரும்,  குறிப்பாக     எதிரணியினர்,  எதிர்மறைக்  கண்ணோட்டத்தில்   பார்க்கக்கூடாது    என்றவர்   கேட்டுக்கொண்டார்.