மகன் பெயர் ஈழ பிரபாகரன்.. மகள் பெயர் தமிழினி! தம்பி பிரபாகரன் உணவக உரிமையாளரின் பின்னணி

prabhakaran01தனது மகனுக்கு ஈழ பிரபாகரன் என்றும், மகளுக்கு தமிழினி என பெயர் வைத்திருப்பதாகவும் தம்பி பிரபாகரன் உணவகத்தின் உரிமையாளர் பெருமாள் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தமிழகம் ஏர்காடு மலைப் பகுதியில் “தம்பி பிரபாகரன்” என்ற பெயரில் பெருமாள் உணவகம் ஒன்றை நடத்தி வருகின்றார்.

இந்த உணவகம் தொடர்பில் இந்திய ஊடகம் ஒன்று சிறப்பு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன் போது கருத்து தெரிவித்த அதன் உரிமையாளர்,

“ஆரம்பம் முதல் திராவிட சிந்தனையில் வாழ்ந்த எனக்கு ஈழ உணர்வும் பற்றிக்கொண்டது. இந்நிலையில் என் மகனுக்கு ஈழ பிரபாகரன் என்றும், மகளுக்கு தமிழினி என்றும் பெயர் வைத்திருக்கின்றேன்.

வியாபாரம் வேறு, கொள்கை வேறு என்று பிரிக்க கூடாது என்பதற்காக “தம்பி பிரபாகரன்” என்ற பெயரில் கடந்த 15 ஆண்டுகளாக உணவகம் ஒன்றை நடத்தி வருகின்றேன்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை “தலைவர், மேதகு” என்று அழைப்பதை பார்க்கிலும் “தம்பி” என்று அழைப்பதே பிடிக்கும் என்பதை புத்தகங்கள் வாயிலாக அறிந்துகொண்டேன்.

இதன் காரணமாகவே, மாபெரும் தலைவரை தம்பி என குறிப்பிட்டு உணவகத்திற்கு பெயர் வைத்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

-tamilwin.com

https://youtu.be/_mqYcWbXtdo

TAGS: