பெல்டா வாக்காளர்கள் பிஎன்னுக்குத்தான் வாக்களிப்பர்: சாலே உறுதியாக நம்புகிறார்

sallehபெல்டா   வாக்காளர்களைத்    தங்கள்   பக்கம்   ஈர்க்கும்   பக்கத்தான்  ஹராபானின்   நோக்கம்   வெறும்  கனவாகத்தான்   முடியப்போகிறது   என்கிறார்   தொடர்பு,  பல்லூடக   அமைச்சர்   சாலே  சைட்   கெருவாக்.

அவர்களின்  கனவு   ஈடேறாது.  பெல்டா   வாக்காளர்கள்  தங்களின்   நலனைக்   கவனித்துக்கொள்வது  அம்னோ-பிஎன்  கூட்டணியே   என்றே   முழுமையாக    நம்புகிறார்கள்    என   சாலே   குறிப்பிட்டார்.

“பெல்டா   வாக்காளர்கள்    ஆளும்  கட்சியை    ஆதரிப்பதால்,   14வது   பொதுத்   தேர்தலில்  பக்கத்தான்   ஹராபான்    பெல்டா   இடங்களில்   வெற்றிபெறுவது   சிரமமாக   இருக்கும்.

“அம்னோவால்    வழிநடத்தப்படும்   ஆளும்   கட்சி    அவர்களுக்கு   நிதி   உதவி,   உதவித்தொகைகள்,    ஆண்டு   போனஸ்   முதலியவற்றையும்   வேறு   பல    உதவிகளையும்   செய்திருப்பதால்   அவர்கள்   ஆளும்  கட்சிக்கு    நன்றிக்  கடன்   பட்டிருக்கிறார்கள்.

“அந்த   நன்றிக்கடன்தான்   ஆளும்   கட்சியே     நாட்டை     ஆள்வதற்குச்   சிறந்த   கட்சி    என்ற   நம்பிக்கையை    அவர்களுக்குக்   கொடுத்துள்ளது”,  என்றாரவர்.