சரவாக்கில் ஐந்தாவது நபருக்கு ரேபிஸ்

rabiesசரவாக்   செரியான்   மவட்டத்தில்   52வயது   நபர்   ஒருவர்   ரேபிஸ்   நோயால்  பாதிக்கப்பட்டுள்ளார்.

கம்போங்   ரெமுனைச்  சேர்ந்த   அவருக்கு    வெறிநாய்க்கடி   நோய்  கண்டிருப்பது    ஜூலை  18-இல்   உறுதிப்படுத்தப்பட்டதாக    சுகாதாரத்    தலைமை   இயக்குனர்   டாக்டர்   நூர்   ஹிஷாம்    இன்று    தெரிவித்தார்.

மே   மாதத்    தொடக்கத்தில்   ஒரு   நாயால்   கடியுண்ட     அவருக்கு    ஜூலை    11-இல்தான்   வெறிநாய்க்கடி   நோய்க்கான    அறிகுறிகள்    தென்பட்டன. அதன்பிறகு   அவர்   மருத்துவமனையில்   சேர்க்கப்பட்டார்.

அவர்   செரியான்   மாவட்டத்தில்    அந்நோயால்   பாதிக்கப்பட்ட   ஐந்தாவது    நபராவார்.  ஏற்கனவே   அந்நோய்    கண்ட    நால்வர்   இறந்து   விட்டனர்.

பெர்னாமா