சசிகலா பற்றிய வீடியோ உண்மையானது தான்!- டி.ஐ.ஜி. ரூபா

roopaசிறையில் சசிகலா கையில் பையுடன் இருப்பது போன்று வெளியாகியுள்ள வீடியோ காட்சி உண்மையானது தான் என பொலிஸ் டி.ஐ.ஜி. ரூபா கூறியுள்ளார்.

பொலிஸ் டி.ஐ.ஜி. ரூபா நேற்று அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்று சோதனை நடத்தும்படி எனக்கு யாரும் உத்தரவிடவில்லை.

பெங்களூரு சிறை மருத்துவமனையில் போதையில் இருந்த கைதிகள் டாக்டர்களை தாக்கினர் என்ற தகவல் எனக்கு கிடைத்தது.

அப்படி என்றால் போதை பொருட்கள் எப்படி கைதிகளுக்கு கிடைத்தது என்பது குறித்து சோதனை நடத்தினேன்.

இந்த சோதனையின்போது எனக்கு தெரிய வந்த முறைகேடுகள் குறித்த தகவல்களை அறிக்கையாக தயாரித்து சிறைத்துறை டி.ஜி.பி.க்கு அனுப்பினேன்.

ஆனால் அந்த அறிக்கை பகிரங்கமாகிவிட்டது. அந்த அறிக்கை குறித்து நான் பேச விரும்பவில்லை. அவ்வாறு பேசுவது சரியாக இருக்காது.

இதுதான் நடந்தது. மற்றபடி என்னை யாரும் சோதனை நடத்த தூண்டவில்லை.

சிறையில் சசிகலா கையில் பையுடன் இருப்பது போன்று வெளியாகியுள்ள வீடியோ காட்சி உண்மையானது தான்.இவ்வாறு பொலிஸ் டி.ஐ.ஜி. ரூபா கூறினார்.

– Maalai Malar

TAGS: