தாய்க்காக இறந்த தங்கை போல் தோற்றமளிக்கும் மகன்

சீனாவில் குவாங்சி மாகாணத்தைச் சேர்ந்த நபரின் தங்கை கடந்த 20 வருடங்களுக்கு இறந்துள்ளார். மகள் இறந்த துக்கத்தை தாங்காத, அவரின் தாயாரின் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் அவரின் செயல்களும் மாற ஆரம்பித்துள்ளன. தன் தாயின் மனநலத்தை பேணிகாக்க வேண்டும் என்பதற்காக, அவர் தனது தங்கை போலவே தோற்றத்தை மாற்றியுள்ளார்.

இதைத் தொடர்ந்து சீன உடையான சியோங் சம் உடையை அணிந்துகொள்வது, அதன் பின் பெண் போலவே தன் சிகையலங்காரத்தை மாற்றி கொள்வது என அச்சு அசல் பெண் போல் இருந்து வருகிறார்.

அதுமட்டுமின்றி தனது தாயை அவர் தான் கவனித்து வருகிறார். எங்கு சென்றாலும் அவரை உடன் அழைத்துச் செல்கிறார்.

இது குறித்து அவர் கூறுகையில், நான் இப்படி செய்வதன் மூலம் தன்னுடைய தாய் மகிழ்ச்சி அடைகிறார். இதன் காரணமாகவே தொடர்ந்து இதை செய்து வருகிறேன்.

தன்னுடைய இந்த தோற்றத்தை பார்த்து மற்றவர்கள் சிரிப்பதைக் கண்டு நான் ஏன் பயப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

அவரின் தாயார் கூறுகையில், தன்னுடைய ஒரு மகள் இறந்துவிட்டாள். அப்போதிலிருந்து இவன் என்னுடைய மகளாக மாறிவிட்டான். இதனால் நானும் தன் மகனை மகளாகவே ஏற்றுக் கொண்டேன் என்று கூறியுள்ளார்.

-lankasri.com