பொதுத்தேர்தலில் போட்டியிடுவது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என்கிறார் மகாதிர்

Mnotdecidedஎதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதா, இல்லையா என்பது பற்றி தாம் இன்னும் முடிவு எடுக்கவில்ல என்று பார்டி பிரிமூமி பெர்சத்து (பெர்சத்து) அவைத் தலைவர் மகாதிர் கூறுகிறார்.

நாம் உண்மையிலேயே நம்பிக்கை இழந்த நிலையில் இருந்தால்தான் நான் போட்டியிடுவேன். ஆனால், நாம் அந்த நிலையில் இல்லை என்று நான் நினைக்கிறேன் என்று மகாதிர் கூறியதாக சினார் ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.

பெர்சத்துவில் பல தகுதியும் அனுபவமும் உள்ள வேட்பாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அடுத்தப் பொதுத்தேர்தலில் போட்டியிடலாம் என்றாரவர்.