மலேசிய ஐஎஸ் தலைவர் ஃபுதாய்ல் சீரியாவில் கொல்லப்பட்டது உண்மைதான்

copsபோலீசார்,   மலேசிய   ஐஎஸ்  தலைவரான    முகம்மட்   ஃபுதாய்ல்   ஒமார்    சீரியாவில்   கொல்லப்பட்டதை   உறுதிப்படுத்தினர்.

கடந்த   மாதம்    சீரியா   பாதுகாப்புப்   படைகள்  ராகாவில்    நடத்திய   விமான   குண்டுவீச்சில்  ஃபுதாய்ல்   கொல்லப்பட்டார்   என்று    அவர்கள்   கூறியதாக    த  ஸ்டார்  இன்று    அறிவித்தது.

“கடந்த   மாதம்   அவர்  கொல்லப்பட்டதாக    தகவல்   கிடைத்துள்ளது.

“இதர   மூன்று    போராளிகளைப்   பொருத்தவரை   அவர்கள்   இன்னும்   ராகாவில்    இருப்பதாகவே   நம்பப்படுகிறது.   சீரியப்   படைகள்    அவர்களை   நெருங்கி   வருகிறார்கள்”,  என   புக்கிட்   அமான்    சிறப்புப்   பிரிவு   இயக்குனர்    முகம்மட்   புஸி   ஹருன்   கூறினார்.

ஒரு  என்ஜிஓ   உறுப்பினரான   ஃபுதாய்ல்  2014,  மே   2-இல்   சீரியா   சென்றார்.