வான் ஷாம் ஷைடி : தொழிலாளர் காப்புறுதி திட்டத்தை உடனடியாக அமல்படுத்துக

Slide1இன்று  தொடங்கவிருக்கும் இரண்டாம் தவணை நாடாளுமன்றக் கூட்டத் தொடரில்  அரசாங்கம் முன்மொழிந்துள்ள தொழிலாளர் காப்புறுதித் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) மத்திய செயலவை உறுப்பினர் வான் ஷாம்ஷைடி வான் ஷாஹிட் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டார்.

“பி.எஸ்.எம். கோரும் வேலை இழப்பு நிதி, அரசாங்கத்தின் தொழிலாளர் காப்புறுதி திட்டத்திற்குச் சமமான ஒன்று. ஆகவே, நாங்கள் அரசாங்கத்தின் இந்த முயற்சியை வரவேற்பதுடன், அதை விரைவில் அமலுக்குக் கொண்டுவர வேண்டும் எனவும் அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம்”, என  வான் ஷாம்ஷைடி தெரிவித்தார்.

“நாட்டின் தற்போதைய மந்தமான பொருளாதார சூழ்நிலையில், இந்தத் தொழிலாளர் காப்புறுதி திட்டம் தொழிலாளர்களுக்கு மிக முக்கியமான பாதுகாப்பாக அமைகிறது. கடந்த 2 வருடத்தில், மலேசியாவில் பல Slide3நிறுவனங்கள் வியாபாரத்தில் திவாலாகி, தொழிலை இழுத்து மூடியிருக்கின்றனர். இதில், 30% தொழிலாளர்கள் எவ்வித நஷ்டஈடும் கொடுக்கப்படாமல் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். திடீர் வேலை இழப்பினால் கண் இமைக்கும் நொடியில் அவர்கள் வாழ்க்கை நிலை மாறிப் போனாது, சுமையும் கூடிப் போனது”, என அவர் விளக்கப்படுத்தினார்.

“இந்தத் தொழிலாளர் காப்புறுதி திட்டத்தின் வழி, வேலை இழந்த தொழிலாளர்களின் வாழ்வில் ஒரு சிறு நம்பிக்கை ஒளி பிறக்கும். அரசாங்கம் கொண்டு வரும் இத்திட்டத்தில், வேலை இழந்தவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலகட்டம் வரை சிறு உதவித் தொகை கொடுக்கப்படும். மேலும், அவர்களுக்கு    புது வேலைக்கு தேவையான பயிற்சிகளும் வழங்கப்படும்”,  என அவர் மேலும் விளக்கினார்.

கடந்த மார்ச் மாதத்தில், தொழிலாளர் காப்புறுதி திட்டம் இம்முறை நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் வாசிப்புக்குக் கொண்டுவரப்படும் என மனிதவள அமைச்சர் வாக்குறுதி அளித்திருந்தார். மேலும், இந்த வருடம் இத்திட்டம் அங்கீகரிக்கப்பட்டு, ஜனவரி 2018-ல் அமலுக்கு வரும் எனவும் உறுதியாகக் கூறியிருந்தார். ஆக, அமைச்சர் அவர் சொன்ன வாக்கைக் காப்பாற்றுவார் என பெரிதும் நம்புவதாக வான் ஷாம்ஷைடி கூறினார்.

Slide2கடந்த 29 மார்ச் 2017-ல், மனிதவள அமைச்சர் ரிச்சட் ராயட்டிடம் 10, 000-க்கும் மேலான ‘தொழிலாளர் வேலை இழப்பு நிதி’யை ஆதரிக்கும் கையெழுத்துப் பிரச்சார அஞ்சல் அட்டைகளை, பி.எஸ்.எம். நாடாளுமன்ற வளாகத்தில் ஒப்படைத்தது இங்குக் குறிப்பிடத்தக்கது.

இன்று தொடங்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடர், ஆகஸ்ட் 7-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. மனிதவள அமைச்சு தொழிலாளர் காப்புறுதி திட்டத்தைத்  தாக்கல் செய்யும்போது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அதற்கு ஆதரவு வழங்க வேண்டும் என வான் ஷாம்ஷைடி அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கேட்டுக்கொண்டார்.