இந்தியர்களின் வாக்குகளை எங்களால் பெற முடியும், ஹிண்ட்ராப் நம்பிக்கை

001எதிர்வரும் பொதுத் தேர்தலில், பக்காத்தான் ஹராப்பானுக்கு ஆதரவாக இந்தியர்களின் வாக்குகளைச் சேகரிக்க, ஹிண்ட்ராப் இயக்கத்தால் முடியுமென அதன் தலைவர் பொ.வேதமூர்த்தி கூறியுள்ளார்.

இன்று, பக்காத்தான் ஹராப்பான் தலைவர் டாக்டர் மகாதீருடன் நடந்த பேச்சு வார்த்தைக்குப் பின், பக்காத்தானுக்கு ஆதரவாக இந்தியர்களின் வாக்குகளைக் கவர, ஹிண்ட்ராப் முக்கியப் பங்காற்றுமென வேதமூர்த்தி ஃப்.எம்.தி.யிடம் தெரிவித்துள்ளார்.

“பக்காத்தானோடு எங்களை இணைத்துகொண்டால், அது அவர்களுக்கு அனுகூலமாக இருக்கும். கிராமப் புற இந்தியர்களின் வாக்குகளைப் பெற, நாங்கள் பக்காத்தான் ஹராப்பானுக்கு உதவுவோம்,” என்றார் அவர்.

இன்று, சுமார் 1 மணி நேரம் நடந்த பேச்சு வார்த்தையில், முன்னாள் அமைச்சர் ஸைட் இப்ராஹிம் மற்றும் சனுசி ஜூனிட் இருவரும் உடன் கலந்துகொண்டனர்.

“கடந்த பொதுத் தேர்தலில், அம்னோவிடம் நூலிழையில் வெற்றி வாய்ப்பை இழந்த கிராமப்புற இடங்களை, குறிப்பாக, கெடா, ஜொகூர், பேராக் மற்றும் சிலாங்கூர் மாநிலங்களில், இம்முறை பக்காத்தான் கைப்பற்ற ஹிண்ட்ராப் உதவுமென அவர் கூறினார்.

“உதாரணத்திற்கு, கடந்த தேர்தலில், கெடா மெர்போக் நாடாளுமன்றத் தொகுதியில், 4,122 வாக்குகள் Waytha_najibnabikai_600வித்தியாசத்தில் பாரிசான், கெஅடிலானை வெற்றிக் கொண்டது. அங்கு 15,000 இந்திய வாக்காளர்கள் இருக்கிறார்கள். ஆக, அத்தொகுதியில் நுழைந்து, இந்தியர்களின் ஆதரவைப் பக்காத்தான் பக்கம் திருப்ப முடியும்,” என அவர் விளக்கினார்.

13-வது பொதுத் தேர்தலில், இந்தியர்களுக்கு உதவுவோம் என நஜிப் கொடுத்த வாக்குறுதியை நம்பி, பாரிசானுக்கு ஆதரவு கொடுத்ததாக வேதா கூறினார். கொடுத்த வாக்கைக் காப்பாற்றாததால், தான் அங்கிருந்து விலகியதாகவும் அவர் தொடர்ந்து கூறினார்.

அதன் பிறகு, கிராமப்புற இந்தியர்களைச் சந்தித்தபோது, பெரும்பாலும் அவர்கள் நாட்டின் பிரதானப் பொருளாதாரத் திட்டங்களிலிருந்து விலக்கப்பட்டே இருப்பது தெரிந்தது.

“பின் தங்கிய நிலையில் வாழும் இந்தியர்களின் எதிர்பார்ப்புகளை நாம் பூர்த்திசெய்ய வேண்டும். பாரிசான் மாற்றத்தைக் கொண்டுவரும் என நாங்கள் நம்பவில்லை, அதனால், பக்காத்தான் ஹராப்பானுடன் இணைந்து அதனைச் செய்ய விரும்புகிறோம்”, என வேதமூர்த்தி கூறினார்.