ஜெயலலிதா மரணம் தொடர்பாக முதல்வர் எடப்பாடி முக்கிய அறிவிப்பு

edapadi45566மறைந்த தமிழக முன்னாள் முதலவர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் பழனிசாமி, ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.

மேலும், ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் நினைவிடமாக மாற்றப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம் அணியின் இரண்டு கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளதால் இரு அணிகளும் இணைவதற்கான சாத்தியம் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.

-lankasri.com

TAGS: