தியாகி திலீபனின் நினைவிடத்தை பாதுகாக்க வலியுறுத்தி கடிதம்!

thileepanயாழ்ப்பாணம் நல்லூர் ஆலயத்தின் பின் வீதியிலுள்ள தியாகி திலீபனின் நினைவிடத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி யாழ். மாநகராட்சிக்கு வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் கடிதமொன்றை எழுதியுள்ளார்.

தியாகி திலீபனின் நினைவிடம் எந்தவித பாதுகாப்பும் இன்றி வெறுமனே காணப்படும் நிலையில், அதற்கு எல்லை வேலிகளை அமைத்து பாதுகாக்குமாறு குறித்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தின் பிரதி, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக இன்றைய (வியாழக்கிழமை) மாகாண சபை அமர்வில் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகளை தலையாக ஏற்று உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தவர் தியாகி திலீபன் அவர்கள். அவரின் 30வது நினைவு நாட்கள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15ஆம் திகதி ஆரம்பிக்கின்றது.

-puthinamnews.com

TAGS: