இரு மொழித் திட்டம்: எதிர்ப்பு கோரிக்கை மனு பிரதமர் நஜிப்பிடம் அளிக்கப்படும்

Notodlpமலேசிய அரசாங்கம் தமிழ்ப்பள்ளிகளில் அமலாக்கம் செய்துள்ள இரு மொழித் திட்டம் (டிஎல்பி) தாய்மொழிக்கல்விக்கு ஆபத்தை ஏற்படுத்தும். ஆகவே, அத்திட்டத்தை அரசாங்கம் இரத்து செய்ய வேண்டும் எனக் கோரும் மனு இன்று பிரதமர் நஜிப் ரசாக்கிடம் அளிக்கப்படும்.

 

இன்று (ஆகஸ்ட் 18) காலை மணி 10.00 க்கு புத்ரா ஜெயாவில் பிரதமர் அலுவலகத்தில் டிஎல்பி எதிர்ப்பு மனு தாக்கல் செய்யப்படும் என்று ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.