காணாமல் ஆக்கப்பட்டவர்களை சந்தித்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையக பிரதிநிதி

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை ஜெனீவாவில் இருந்து வருகை தந்துள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தின் பிரதிநிதியான தோமஸ் மற்றும் இலங்கை யுஎன்எச்சி ஆர் பிரதிநிதி ஆகியோர் சந்தித்துள்ளனர்.

கிளிநொச்சியில் காணமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்காக அவர்களது உறவினர்கள் 179ஆவது நாளாகவும் நேற்றைய தினம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இவர்களை சந்தித்த குறித்த பிரதிநிதிகள் நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளனர்.

இருப்பினும் இந்த சந்திப்பைத் தொடர்ந்து குறித்த பிரதிநிதிகள் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்க மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

-tamilwin.com

TAGS: