சற்று முன் கோஸ்டா கடல் கரையில் 5 தீவிரவாதிகள் தற்கொலை அங்கியோடு தாக்குதல்

attack

சற்று முன்னர் கோஸ்டா பிராவோ உல்லாச கடல் கரையில், 5 தற்கொலைதாரிகள் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். அவர்கள் அனைவரும் தற்கொலை அங்கிகளை அணிந்திருந்தாலும். அதிஷ்டவசமாக அவை எதுவுமே வெடிக்கவில்லை. இவர்கள் தமது காரால், மக்களை இடித்து தள்ளிவிட்டு. இறுதியில் தற்கொலை அங்கியை இழுத்து வெடிக்கச் செய்ய திட்டம் தீட்டி இருந்ததாக றொயிட்டர் செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது.

இருப்பினும் விரைந்து செயல்பட்ட பொலிசார், அவர்கள் ஐவரையும் உடனே சுட்டுத் தள்ளிவிட்டார்கள். இருப்பினும் 7 பேர் இதுவரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில். பலர் வைத்தியசாலையில் உயிருக்கு போராடி வருவதாகவும் மேலும் அறியப்படுகிறது. இத்தாலி, ஸ்பெயின், துனீசியா போன்ற நாடுகளுக்கு விடுமுறைக்கு சென்றிருக்கும் தமிழர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. கடல் கரைகளையே மு…ம் தீவிரவாதிகள் தமது தாக்குதல் தளமாக தேர்வு செய்கிறார்கள்.

-athirvu.com

பார்சிலோனா தாக்குதல்: பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 11 பேர் கவலைக்கிடம்

பார்சிலோனாவில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 26 பேர் காயம் அடைந்துள்ளதாகவும், இவர்களில் 11 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்பெயின் தலைநகரான பார்சிலோனாவில் நேற்று மாலை 5 மணியளவில் வாகனம் ஒன்று கூட்டத்தினர் மீது பாய்ந்துள்ளது.

இத்தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டதுடன் 100-க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர்.

இச்சம்பவத்திற்கு பின்னர் பொலிசார் நடத்திய வேட்டையில் சந்தேகத்திற்குரிய 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

-lankasri.com

 

இத்தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த வெளியுறவு அமைச்சகம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், பார்சிலோனா தாக்குதலில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 26 பேர் காயம் அடைந்துள்ளதாகவும், இவர்களில் 11 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் உள்துறை அமைச்சரான Gerard Collomb பேசியபோது, ‘பார்சிலோனாவில் நிகழ்ந்த தாக்குதல் கடுமையாக கண்டிக்கத்தக்கது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், தாக்குதலில் காயமுற்ற பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர்களை நேரில் சந்திக்க பார்சிலோனா செல்வதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக Gerard Collomb தெரிவித்துள்ளார்.