என்னை காப்பாற்றுங்கள்…..இல்லையேல் இறந்துவிடுவேன் என தாயிடம் கதறிய சிறுமி

ஓமன் நாட்டை சேர்ந்த 65 வயது ஷேக்கை திருமணம் செய்துகொண்ட 16 வயது சிறுமி தன்னை காப்பாற்ற வேண்டும் என தனது தாயிடம் கதறியுள்ளார்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் ஐதராபாத்தை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், 65 வயது ஷேக்கிற்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.

தற்போது அச்சிறுமி ஷேக்குடன் மஸ்கட்டில் வசித்து வருகிறார், 5 லட்சம் கொடுத்து சிறுமியை விலைக்கு ஷேக் வாங்கியுள்ளதாகவும் இதற்கு தனது கணவரின் அக்கா உடந்தையாக இருந்ததாகவும் சிறுமியின் தாய் புகார் அளித்துள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பாக மத்திய மந்திரி மேனகா காந்தி வெளியுறவுத்துறை மந்திரிக்கு கோரிக்கை விடுத்து உள்ளார், சிறுமியை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக் கொண்டு உள்ளார்.

மஸ்கட்டில் இருந்து போனில் பெற்றோர்களிடம் பேசிய சிறுமி, நீங்கள் என்னை இங்கிருந்து காப்பாற்றவில்லை என்றால், நான் இறந்துவிடுவேன்..” என அழுதுள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது.

-lankasri.com

TAGS: