கிள்ளான் மருத்துவமனை உணவகத்தில் “எலி”: மூடப்பட்ட அந்த உணவகம் அன்றே திறக்கப்பட்டது

 

RatinHospitalகிள்ளான் தெங்கு அப்புவான் ரஹிமா மருத்துவமனை சிற்றுண்டி உணவகத்தில் எலி விருந்துண்ணும் காட்சி வீடியோவில் காணப்பட்டததைத் தொடர்ந்து அந்த சிற்றுண்டிசாலையை மூடும்படி நேற்று மதியம் மணி 2.00 அளவில் உத்தரவிடப்பட்டது. ஆனால், அன்றய தினமே இரவு மணி 10 அளவில் அது மீண்டும் திறக்கப்பட்டது.

அந்த சிற்றுண்டிச்சாலை ஏன் மீண்டும் அதே நாளில் திறக்கப்பட்டது? மருத்துவமனைக்கு வருகையளிப்பவர்கள் மற்றும் மருத்துமனை பணியாளர்களின் நலன்களைக் கவனத்தில் கொண்டு அந்த உணவகம் மீண்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டதாக சிலாங்கூர் சுகாதார இலாகா இயக்குனர் ஸைலான் அட்னான் கூறினார்.

(ஆனால், கவலைப்பட வேண்டாம்.) அந்த மருத்துவமனை சிற்றுண்டிச்சாலையின் சுத்தம் மற்றும் சுகாதாரம் ஆகியவற்றின் மீது சுகாதார இலாக கவனம் செலுத்தும் என்றும் அந்த இடத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று அடிக்கடி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள அந்த உணவகத்தை நடத்தும் குத்தகையாளர் கருப்புப்பட்டியலில் சேர்க்கப்படுவதுடன் குத்தகை இரத்து செய்யப்படும் என்றும்கூட அவர் கூறினார்.