ரூபாய் நோட்டு வாபஸ்: பிரிவினைவாதிகள் போதிய பணம் கிடைக்காமல் அவதி-அருண்ஜெட்லி

arun-jaitleyமும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய பாதுகாப்புதுறை மந்திரி அருண்ஜெட்லி பேசியதாவது:

ரூபாய் நோட்டு வாபஸ்திட்டத்திற்கு பின் காஷ்மீரில் உள்ள பிரிவினைவாதம், பயங்கரவாதம்,நக்சலைட்டுகள் உள்ளிட்டவைகளுக்கு போதிய பணம் கிடைக்காமல் அவதிப்பட்டனர்.

மத்திய அரசு ரூபாய் நோட்டு வாபஸ் பெறுவதற்கு முன்னர் காஷ்மீரில் போராட்டங்களுக்கு ஆயிரக்கணக்கான காஷ்மீர் இளைஞர்கள் கூடுவார்கள். ரூபாய் நோட்டு வாப்ஸ் திட்டத்திற்கு பின் 20-25 பேர் கூட போராட்டத்திற்கு வருவதில்லை. வளர்ச்சியை அதிகப்படுத்த, நாட்டின் நலன் கருதி 2014 முதல் மத்திய அரசு பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

-dailythanthi.com

TAGS: