தடுத்து வைக்கப்பட்டுள்ள 72 தமிழ் அரசியல் கைதிகள் மீதும் வழக்கு பதிவு: டி.எம்.சுவாமிநாதன்

Sri-Lanka-Prisonஎந்தவித வழக்குகளும் பதியாமல் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள 72 தமிழ் அரசியல் கைதிகள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு,

விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறைச்சாலைகள் மற்றும் மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகளில் விடுதலை தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் சட்டமா அதிபரும் பேசியுள்ளன். 72 அரசியல் கைதிகள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த வழக்குகள் விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.“ என்றுள்ளார்.

-puthinamnews.com

TAGS: