காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்துக்கு இடம் வழங்க கிளிநொச்சி கோயில் நிர்வாகம் மறுப்பு!

missingகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தொடர் போராட்டத்துக்கு இடம் வழங்க முடியாது என்று கிளிநொச்சி கந்தசுவாமி கோயில் நிர்வாகம் நேற்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.

தொடர்ச்சியாக 200 நாட்களுக்கு மேலாக போராடி வரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு, குறித்த கோயில் நிர்வாகம் தன்னுடைய அறிவித்தல் கடிதத்தை வழங்கியுள்ளது.

போராட்டக்காரர்கள் அமைத்திருந்த பந்தல் அண்மையில் கோயில் திருவிழா நடைபெறவுள்ளதால் அகற்றப்பட்டது. இந்த நிலையிலேயே, தொடர்ந்தும் போராட அனுமதிக்க முடியாது என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

-puthinamnews.com

TAGS: